மணல்காட்டில் விஷமிகள் தீவைப்பு, ஒரு ஏக்கர் சவுக்கு காடு எரிந்து நாசம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காட்டுக்கு காட்டில் விஷமிகளால் தீயிட்டு நாசமாக்க பட்டுள்ளது. இன்று மதியம் ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த தீ வைப்பு சம்பவத்தில் சுமார் ஒரு ஏக்கர் வரையான சவுக்கு மரங்கள் எரிந்து நாசமாகி விட்டது. கிராம மக்கள் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேச சபை உடனடியாக தண்ணீர் பவுசர் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் செயலர் திரு பிரபாகரழூர்த்தி நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர்கள் ராணுவம் பொதுமக்கள் இணைந்து இந்த தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மணக்காடு சவுக்கம் காட்டுப் பகுதியில் தொடர்ச்சியாக விஷமிகளால் தீ வைப்பது குறிப்பிடத்தக்கது