யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி
யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் 25/3/2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.