வட்டுக்கோட்டை இலங்கை வங்கி முகாமையாளரின் இரக்கமற்ற செயல்
வட்டுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் நடவடிக்கையால் பாதிப்படைந்த பெண் தனது கஷ்டத்தை கூறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நிசாந்தினி எனும் 3பிள்ளைகளின் தயார் இலங்கை வங்கியில் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை மாதாந்தம் தவணை தப்பாமல் செலுத்தி வந்துள்ளார். தினக்கூலிக்கு செல்லும் இவர் தற்போதைய நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் கூலி வேலை பாதிப்படைந்து மூன்று பிள்ளைகளின் உணவை கொடுப்பதில் சிரமம் அடைந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரிடம் இரண்டாயிரம் ரூபாவினை தமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு கேட்டிருந்தார். இதற்கிணங்க அவர்களும் வைப்புச் செய்துள்ளனர். காசினை பெற்றுக் கொள்வதற்காக வங்கிக்குச் சென்ற போது வங்கி முகாமையாளரினால் உங்களின் கடன் தொகை உள்ளதால் காசு எடுக்க முடியாது என தடை விதித்துள்ளார். தான் தனது குடும்ப நிலையை விளக்கி குழந்தைகள் சாப்பிடக்கூட வழியில்லை என கதறி அழுத போதும் அவர் இணங்கவில்லை என அந்தத் தாய் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அவர்களினால் நுன்கடன் சேவை கட்டணங்களை இடைநிறுத்த உத்தரவு வழங்கப்பட்ட போதிலும் அரச அதிகாரிகளின் செயல்கள் வேதனைக்குரிய விடயமாகும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.