Fri. May 17th, 2024

யாழ்ப்பாணத்தில் மதுபானம் என்று நினைத்து டின்னர் எரிபொருளை பருகியவர் பரிதாபகரமாக பலி

யாழ்ப்பாணத்தில் மதுபானம் என்று நினைத்து டின்னர் எரிபொருளை பருகியவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ் தென்மராட்சியின் நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
வீட்டிற்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் வர்ணக் கலவைக்காக டின்னர் வாங்கிவைக்கப்பட்டது. புதிய சாராயப் போத்தல் ஒன்றில் குறித்த டின்னர் ஊற்றி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை ஒன்பது மணியளவில் குறித்த இளைஞர் அந்த போத்திலை எடுத்து திறந்து மடமடவென்று குடித்துள்ளார்.
இதனையடுத்து அவர் சிறிது நேரத்தில் அசைவின்றிக் கிடந்துள்ளார். குடித்ததனால் ஏற்பட்ட போதை காரணமாகவே அவர் அவ்வாறு கிடப்பதாக உறவினர்கள் நினைத்தபோதும் பிற்பகல் 2 மணியளவில் அவரது நிலையில் சந்தேகம் ஏற்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் அதே இடத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனாதீபன் (வயது-36 ) என்பவரே உயிரிழந்தார் என்று
சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்