Sun. May 19th, 2024

யாழில் போட்டியிடும் கிருபாகரன் உடனான நேர்காணல்

யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல் 2020 ஆ. கிருபாகரன்,  அதிபர் கிருபா லேணர்ஸ் யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி டெலிபோன் சின்னத்தில் இலக்கம் இரண்டில் போட்டியிடுகிறேன். எனது எண்ணங்கள் எனது பாராளுமன்ற உறுப்பினர் புரிய மாதாந்த ஊதியத்தை வறுமையில் இனம் காணப்படுகின்ற மக்களுக்கு வழங்குவது. கல்விகற்ற வசதிகள் குறைவான நிலையில் உள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான கற்றல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் பின்தங்கிய பிரதேச பாடசாலை முன்பள்ளிகள் அறநெறி பாடசாலை என்பவற்றின் கல்விக்கான தேவைகளை பூர்த்தி செய்தல். இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி மைதானங்களை புனரமைத்தல். எமது பிரதேசத்திலுள்ள தகுதியான சிறந்த விளையாட்டு வீரர்களை இனங்கண்டு அவர்களை தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல். போதைப்பொருள் பாவனையை சிக்குண்ட இளைஞர்களை மீட்டு அழைத்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தாள் ..புதிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல். பெண் தலைமைத்துவ வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் . மீனவர்களுக்கான நிவாரண உதவிகளை மானியங்களை பெற்றுக்கொடுத்தல். விவசாயத்தை மேம்படுத்தும் அனைத்து உதவித் திட்டங்களை உருவாக்கி விவசாயிகளுக்கு தேவைகளை பூர்த்தி செய்தல். போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதில் முன்னுரிமை வழங்கப்படும். நமது தேசத்தில் நீர்  பற்றாக்குறையான இடங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல். வேலையில்லா பட்டதாரி களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுத்தல். கல்வி மற்றும் விளையாட்டுத்துறை எமது மாகாணத்தில் முதல் நிலைக்கு கொண்டு வருதல்.எமது உரிமைக்காக போராடிய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல், எனது மக்களின் சொந்த நிலங்களை மீட்டு எடுக்க  நடவடிக்கை எடுத்தல் .வீடு இல்லாதவர்களுக்கு வீடு திட்டம் ஒழுங்கமைப்பு,  நீண்டகாலம் புனரமைக்கப்படாத  வீதிகள் புனரமைக்கப்படும் .தமிழர் கலை கலாச்சார சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் புனரமைத்தல். எமது மொழி உரிமையை நாடு முழுவதும் நிலைநாட்ட வலியுறுத்தல் 19 கோரிக்கைகளை முன்வைத்து நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன் நான் வெற்றி பெற்றதும் அநேகமான வேலைத்திட்டங்களையும் முன்நின்று எனக்கு வாக்களித்த மக்களுக்கு செய்து கொடுப்பேன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்