துன்னாலயில் கசிப்பு வைத்திருந்த பெண்ணுக்கு சிறை
நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் நிமித்தம் சிவில் நிர்வாக பொறுப்பதிகாரி ஆனந்த சுமன ஸ்ரீ. ஐபி துன்னாலை பகுதியில் 40 வயதுடைய பெண்மணியை ஒரு போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்ட பெண் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரியினால் முன்னிலைப் படுத்தப்பட்டார். ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புபட்டு இருந்ததனால் நீதிமன்றத்தினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.