யாழில் நேற்று செய்யப்பட்ட சோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை
நேற்றைய பரிசோதனையில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லையென உறுதி செய்யப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை 65 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 2 பேர்
* பொது வைத்தியசாலை வவுனியா – 3 பேர்S M
* கடற்படையினர் வைத்தியசாலை காங்கேசன்துறை – ஒருவர்.
* பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் மையம் – 30 பேர் SLTB MULLAI
* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சண்டிலிப்பாய் – 3 பேர்.
* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு முல்லைத்தீவு – ஒருவர்.
* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு புதுக்குடியிருப்பு – ஒருவர்.
* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உடுவில் – 24 பேர்.
என 65 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.