Fri. May 17th, 2024

யாழில் இருந்து வந்து வடமராட்சிக்கு உலர் உணவு வழங்கிய இளைஞர்கள்

11.04.2020 .இன்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களின் முயற்சியினால் லண்டனில் வாழும் தங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் உதவியுடன்  யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினால் தினக்கூலி வேலை செய்பவர்கள் கஷ்டமான நிலையை எதிர்கொண்டு உள்ளதால் அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்கள். இன்று வடமராட்சி பகுதிக்கு வருகை தந்த அவர்கள் தினக்கூலி வேலை செய்பவர்களை இனங்கண்டு ஒவ்வொரு கிராமங்களாக சென்று 5,400 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்கள். வர்த்தக சங்க செயலாளர் அவர்களுடைய அனுசரனையுடன் கரவெட்டி அல்வாய் கரணவாய் தெற்கு செல்வபுரம் கிராமங்களிலுள்ள தினக்கூலி வேலை செய்யும் பொதுமக்களை தெரிவுசெய்து உலர் உணவுப் பொதிகளை வழங்கி சென்று உள்ளார்கள். வடமராட்சிப் பகுதியில் 78 பேருக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கிய  அவர்களின் முயற்சிக்கு வடமராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் நன்றியை தெரிவித்தார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்