Fri. May 17th, 2024

யாரும் கற்பனை செய்யமுடியாத ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர் நாளை எம்முடன்– கண்டியில் வைத்து மஹிந்த தகவல்

ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பிரமுகரும் அதன் தலைர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் விரைவில் கோதபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக மாறவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

கண்டிக்கு இன்று விஜயம் செய்தபோது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர் யாரும் கற்பனை செய்து கொள்ளமுடியாத மிகவும் பிரபலமான ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வந்து கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்காவையுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க , திடீரென மஹிந்த ராஜபக்சவை ஆதரித்ததுடன் , தமிழ் கூட்டமைப்புடன் செய்த உடன்படிக்கை என்று போலியான கடிதங்களை வெளியிட்டு ரணில் விக்ரமசிங்க மீது அபாண்டமான பழியை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்