Fri. May 17th, 2024

சங்கிலி அறுத்தவா்கள் நையப்புடைக்கப்பட்ட பின் பொலிஸில் ஒப்படைப்பு.

அக்கராயன் கிராமத்தில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்த திருடா்களை துரத்தி சென்ற இளைஞா்கள் திருடா்களை மடக்கி பிடித்து நையப்புடைத்த பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற பெண் அணிந்திருந்த தங்கசங்கிலியை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அறுத்து சென்றுள்ளனா். இதனை அவதானித்த

அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிவிட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த திருடர்கள் தங்க சங்கிலியுடன் வேகமாக பயணித்தபோது அப்பிரதேச இளைஞர்கள் துரத்தி சென்று

மடக்கி பிடித்துள்ளனர். இதன்போது, திருட்டில் ஈடுபட்ட குறித்த இரு இளைஞர்களிடமிருந்து தங்க சங்கிலி மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மெற்கொண்டுள்ள பொலிசார் கைது செய்த சந்தேக நபர்களை

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளமை  குறிப்பிடதக்கதாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்