தேர்தல் முறைப்பாடுகளை இனி மனித உரிமை ஆணைக்குழுவில் பதியலாம்!!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் தேர்தல் விதி மீறல்களை கண்காணிப்பதற்காக குறித்த பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள குறித்த பிரிவுக்கு 1996 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும்.
அத்தோடு, தொலைநகல் ஊடாக எழுத்து மூலமான முறைப்பாடுகளை பதிவுசெய்ய வேண்டுமெனில் 0112 50 55 74 என்ற இலக்கத்தை பயன்படுத்தி முறைப்பாடுகளை வழங்க முடியுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.