சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்படும்!! -மஹிந்த தேசப்பிரிய-
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முகப்புத்தகத்தை தடை செய்யவதோ அல்லது கட்டுப்படுத்துதோ அவசியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக குரோத கருத்துக்களை தூண்ட வேண்டாம் எனவும் அவ்வாறான கருத்து தூண்டும் சமூக ஊடக கணக்குகளை தற்காலிகமாக முடக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தை பாதுகாத்து அனைவரும் வாக்களிக்குமாறும் இதன்போது எவ்வித தேர்தல் சட்டத்தையும் மீற வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.