மே 30 வரை மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை
மே 30 வரை அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தாக்கத்தினால் அதிகளவு உயிரிழப்புகளும் தொற்றுகளும் ஏற்பட்டுவரும் நிலையில் இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது