மூர்க்கம் கொண்ட யானையால் இரு பிள்ளைகளின் தந்தை அடித்து கொலை
புதுருவயா,பாகமூன பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவர் எம்.டி.ஜி. 43 வயதான நலின் பிரியாசாத் குமாரசிங்க என்ற இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த யானையை அயலவர்கள் உதவியுடன் கலைக்க முற்படுக்கையிலேயே மூர்க்கம் கொண்ட யானையால் தாக்கி கொல்லப்பட்டார்