Tue. May 21st, 2024

மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ள வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளார்.
இன்று மே முதலாம் திகதி தொடக்கம் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார்.

அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேறொரு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பதில் ஆளுநராக மூன்று மாதங்களுக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், அண்மைக்காலமாக கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்தே பணிகளை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்