Fri. May 17th, 2024

முள்ளிவாய்க்கால் அவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் கடைபிடிப்பு

முள்ளிவாய்க்கால் அவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று 18/5/2020 , திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் மாணவர்களால் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று காலை பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் – 19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்