முல்லைத்தீவில் வர்ண இரவு நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் விளையாட்டுத்துறையில்
சாதனை புரித்த வீரர்களை கெளரவப்படுத்துவதற்கான
வர்ண இரவு நிகழ்வு நாளை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் நடைபெறும் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன்,
சிறப்பு விருந்தினர்களாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் M.ஜீவரானி புனிதா,
யாழ்.போதனா வைத்தியசாலை, பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரும் முன்னாள் மாவட்ட விளையாட்டு வீரருமான வைத்தியர் கதிர்வேல் இளஞ்செழிய பல்லவன் ஆகியோரும்
கெளரவ விருந்தினர்களாக மூத்த விளையாட்டு வீரரும் கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுனருமான S.I ஆசைநாதர் (சுதன்), கராத்தே குத்துச் சண்டை தேசியபதக்கம் பெற்ற வீரரும் தற்போதைய முல்லைத்தீவு மாவட்டத்தின் குத்துச்சண்டை, கராத்தே பயிற்றுனருமான
கா.நாகேந்திரம் (வள்ளுவன் மாஸ்ரர்), ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.