Thu. May 16th, 2024

முதலாவது தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு தடை

முதலாவது தடுப்பூசி ஏற்றாதவர்கள் வியாபார  நடவடிக்கையில் ஈடுபடுவது மற்றும் பொதுமக்களைச் சந்திப்பதை தடை செய்யும் நடவடிக்கையில்
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறித்துள்ளனர்.
முன்னணிக் களப்பணியாளர்கள் தற்போது தடுப்பூசி பெற்றுள்ள நிலையில் இன்று புதன்கிழமை முதல் முதற்கட்டமாக நெல்லியடி மற்றும் உடுப்பிட்டிப் பகுதிகளில் ஆகக் குறைந்தது ஒரு தடுப்பூசியாவது பெறாதவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் பொதுமக்களை சந்திப்பது என்பனை தடை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தினை எப்போதும் தம்முடன் வைத்திருக்குமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்