முச்சக்கரவண்டி மதகுடன் மோதியதால் இருவர் காயம்
கோப்பாய் பாலத்திற்கு அருகில் நேற்று இரவு (02) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வேகமாக சென்ற முச்சக்கர வண்டியொன்று மதகு ஒன்றுடன் மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் , இதனால் முச்சக்கர வண்டியில் பிரயாணம் செய்த இருவர் காயமடைந்ததுடன், யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.