மீண்டும் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுத்த கோத்தபாய, உறுதியாக மறுப்பு தெரிவித்த பீல்ட் மார்ஷல்
நிதி அமைச்சை தவிர வேறு எந்த அமைச்சுப்பதவியையும் தனக்கு தருவதாக தற்போதைய அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கிரிபத்கோடாவில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஆனால் தான் அடர்க்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டவுடன், சரத் பொன்சேகா அதனை சரியான தெரிவு என்று குறிப்பிட்டதுடன் , அதனை தொடர்ந்து கோத்தபாய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது