Thu. May 16th, 2024

குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) உயர் போலீஸ் அதிகாரி நாட்டை விட்டு தப்பியோட்டம்

குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) உயர் போலீஸ் அதிகாரி நிஷாந்தா சில்வா இன்று (24) பிற்பகல் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இவர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான பல சர்ச்சைக்குரிய விசாரணை வழக்குகளில் ஈடுபட்டிருந்தார்
இன்று பிற்பகல் 12.50 மணியளவில் நிஷாந்தா சில்வா தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு சுவிட்சர்லாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சில்வாவுக்கு எந்தவித விடுப்பும் வழங்கப்படவில்லை என்று போலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர தெரிவித்தார் எனப்து குறிப்பிடத்தக்கது. கோத்தபாய தலைமையிலான அரசாங்கத்தால் பழிவாங்கப்படலாம் என்பதாலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் , சுவிற்சர்லாந்து அவர்க்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவருகின்றது
ஏற்கனவே குற்றப்புலனாய்வு துறையின் தலைவர் தென்மாகாண போலீஸ் மா அதிபருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டது குறிபிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்