Thu. May 16th, 2024

இராஜாங்க அமைச்சர்களை தெரிவதில் இழுபறி, மஹிந்தவின் சிபாரிசுவை ஏற்காத கோத்தா – தள்ளிப்போன பதவியேற்பு

இராஜாங்க அமைச்சர்களை தெரிவதில் இழுபறி . தள்ளிப்போன பதவியேற்பு
ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு 27 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாணப் பத்திரம் இன்று நடக்கவுள்ளதாக இருந்த நிலையில் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இராஜாங்க அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதற்கான மேலதிக பணிகள் நடைபெற்று வருவதால் இந்த தாமதம் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களை தெரிவதில் உள்ள இழுபறியே இதற்கு காரணம் என்று தெரியவருகிறது. மஹிந்த ராஜபக்சவின் சிபாரிசுகளையே கோத்தபாய ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இதனால் மஹிந்த தனக்கு நெருங்கியவர்களிடம் குறைபட் டுகொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்