நாளை நள்ளிரவு முதல் சாதாரணதர பரிட்சைகான அனைத்து வகுப்புகளுக்கும் தடை
சாதாரணதர பரிட்சை தொடர்பான அனைத்து தனியார் கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன நாளை நாளை (நவம்பர் 26) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது என்று பரிட்சை திணைக்களம் அறிவித்துள்ளது
நவம்பர் 26 நள்ளிரவு முதல் டிசம்பர் 12 பரிட்சைகள் அனைத்தும் நிறைவடையும் வரை வரை வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள், ஏற்பாடு செய்வது மற்றும் நடத்துவது என்பன தடை செய்யப்பட்டுள்ளது
இதற்கிடையில், பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை விநியோகித்தல் மற்றும் வைத்திருத்தல் மற்றும் எந்தவொரு ஊடகங்கள் மூலமாகவும் இதுபோன்ற வினாத்தாள்கள் வழங்குதல் எஎன்பனவும் இந்த காலகட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனம் தொடர்பாக அருகில் உள்ள போலீஸ் நிலயத்திலோ அல்லது பரிட்சை திணைக்களத்திலோ முறைப்பாடு செய்யலாம்