மீசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு
மீசாலை கிழக்கு மீசாலையில் 9/4/2020 வியாழக்கிழமை பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
சோமசுந்தரம் சிந்துஜா வயது 21 என்பவரே மரணமடைந்தவராவார்
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது