தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான விசேட கொடுப்பனவு அறிவிப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் தனியார் பஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் ஊதியம் இழந்து தவிக்கும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான விசேட கொடுப்பனவு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.