மிருசுவில் எழுதுமட்டுவாழ் ஒட்டுவெளிச்சந்தியில் பஸ் மோதி 3 வயது சிறுமி படுகாயம்
பேத்தியாருடன் சாவகச்சேரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது
மிருசுவில் எழுதுமட்டுவாழ் ஒட்டுவெளிச் சந்தியில் 12/1/2020 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு பஸ் மோதியதில் மூன்று வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்
எழுதுமட்டுவாழ் ஒட்டுவெளிச
சேர்ந்த சி.யாசினி என்பவரே படுகாயமடைந்தவராவார்
பஸ்சில் சென்று ஒட்டுவெளிச் சந்தியில் இறங்கி புகையிரத தண்டவாளப் பகுதியில் றோட்டுக் கரையுடன் இருக்கும் வீட்டிற்கு றோட்டுக்கு குறுக்காக ஓடிய போது கிளிநொச்சி பகுதியில் இருந்து வந்த கார் மோதியதில் மூன்று வயது சிறுமி படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.