கொடிகாமம் சந்தை வாயிலில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்களுக்கு கழிவு ஒயில் அடிப்பு
கொடிகாமம் சந்தை வாயில் புறமாக தீட்டப்பட்டிருந்த பாரம்பரிய கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் வர்ண ஓவியங்களுக்கு 11/1/2020 சனிக்கிழமை கழிவு ஓயில் பூசி ஓவியங்களை அசிங்கப்படுத்தியுள்ளனர்
ஜனாதிபதியினுடைய செயற்றிட்டத்தின் கீழ் நகரத்தினை அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கு அமைவாக கொடிகாமம் பிரதேச இளைஞர்கள் வர்த்தகர்கள் பொது மக்கள் ஒன்றிணைந்து இந்த வர்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்
இந்ந சம்பவம் தொடர்பாக
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைவதற்காக உபதவிசாளர் கடந்த மாத சபை அமர்வில் பிரேரணை சமர்ப்பித்து ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என சாாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ மயூரன் தெரிவித்தார்