Fri. May 17th, 2024

உஹனவில் அதிரடிப்படை அதிகாரிகளை போட்டுதாக்கிய நபர்கள், 4 பேர் கைது

அம்பாறை உஹனவில் எஸ்.டி.எஃப் அதிகாரிகள் குழுமீது நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உஹனவில் உள்ள லத்துகலா வனப்பகுதியில் இருந்து முச்சக்கர வண்டி மற்றும் ஒரு டிராக்டரில் திரும்பி வந்துகொண்டிருந்த எஸ்.டி.எஃப் அதிகாரிகள் குழுவை முச்சக்கர வண்டியில் வந்த சந்தேக நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு சரமாரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எஸ்.டி.எஃப் அதிகாரிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உஹன போலீசார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து முச்சக்கர வண்டியுடன் நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

அவர்கள் அம்பாறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்