Fri. May 17th, 2024

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!!

ஹபரன – கிரிவடுன்ன பகுதியில் உள்ள கலேவல, பட்டிவெல கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 29 வயதான நபர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

மின்சார சபையின் புதிய மின் சக்தி அமைப்பு ஒன்றை உருவாக்கி கொண்டிருந்த போது அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாவடைந்துள்ளார் என்று வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்