Fri. May 17th, 2024

கள்ளக் காதலனுடன் ஓடிய 2 பிள்ளைகளின் தாய்!! -2 வருடத்தின் பின் கண்டுபிடித்த பொலிஸ்-

கள்ளக் காதலனுடன் ஓடிய இரண்டு பிள்ளைகளின் தாய் இரண்டு வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பூஜாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாய் 2 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதான அவருடைய கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின்படி அவரை பொலிஸார் தேடிய போதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
குறித்த பெண் தொலைந்தமை தொடர்பில் பொலிஸாரினால் பல்வேறு நிறுவனங்களிடம் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஆட்பதிவு திணைக்களத்திடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம பிரதேசத்தில் அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் அழைத்து விசாரித்த போது 2 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் இவர் தான் என தெரியவந்துள்ளது.

இந்த பெண் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அதே பிரதேசத்தை சேர்ந்தவருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்