ரயில் மோதி யானை பலி!! -வவுனியாவில் சம்பவம்-
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பீடியா பண்ணைப்பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கிச் சென்ற ரயிலுடன் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானை ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யானை 20 வயதுடையது என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.