Fri. May 17th, 2024

மினிபஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மினிபஸ் மோட்டார் சைக்கிள் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவத்தில் வடக்கம்பரை பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார் பலாலி பருத்தித்துறை சிராம்பியடிச் சந்தியில்  இணையும் வீதியில்  7:30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பொறியியல் பீட தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஏற்றிச்செல்லும் மினி பஸ் விபத்துக்குள்ளாகியதில் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்