Fri. May 17th, 2024

காதலில் தோல்வி யுவதி தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை

காதல் தோல்வியால் மனம் வீரகத்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிழக்குப் புத்தூர் பகுதியைச் சேர்ந்த உலகேந்திரம் விதுஷகா.23 என்ற யுவதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வசித்துவரும் குறித்த யுவதி ஒரு வருடமாக தொலைபேசியில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது காதலனுடன் திருமணம் செய்யுமாறு கோரி வந்துள்ளார்.  அதற்கு குறித்த இளைஞன் பெற்றோரை கேட்டுச் சொல்கிறேன் என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டார். அதன் பின்னர் ஒரு மாதமாக இளைஞன் தொடர்பு கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனம் விரக்திஅடைந்தது யுவதி கடந்த 21. ஆம் தேதி இரவு வீட்டில் தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டி தீக்காயத்துக்கு உள்ளானயுவதி அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்