அல்லாரை பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு
அல்லாரை பகுதியில் கடை ஒன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாதவர்கள் வாள் வெட்டு தாக்குதலை மேற் கொண்டுள்ளனர்
இந்த சம்பவம் 23/6/2020 செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது
குஞ்சுராசா அஜந்தன் வயது 40 என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்
கடையில் வேலையிலீடூபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடை முதலாளியை கூப்பிட்ட போது வர்த்தகர் வெளியே வந்தவுடன் வாளினால் வெட்டியதில் படுகாயமடைந்தார்
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது