இன்று மட்டும் 40 கோரோனோ தொற்று , 1991 ஆன மொத்த தொற்று எண்ணிக்கை
இன்று (23) இரவு 10.00 மணி நிலவரப்படி மேலும் 11 பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்கள.
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவர்களிடத்திலேயே இந்த புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்ந்துள்ளது.
இன்று முன்னதாக, 29 பிற COVID-19 நோயாளிகள் நாட்டில் அடையாளம் காணப்படிருந்தனர். மும்பையில் இருந்து இலங்கை வந்துள்ள கப்பலிலேயே இவர்கள் வருகை தந்திருந்தார்கள்.
அதன்படி, மொத்தம் 40 தொற்றுகள் ஒரு நாளுக்குள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இலங்கையில் கோரோனோ தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இப்போது 1,548 ஆக உள்ளது.
432 தொற்றுக்குள்ளானவரக்ள் தற்போது மருத்துவ கவனிப்பில் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கை கூறுகிறது.