Sun. May 19th, 2024

மாா்ச் 2ல் புாிந்துணா்வு ஒப்பந்தம் கைச்சாத்து! சஜித் கூறுகிறாா்.

ஷமகிஜன பலவேகய மற்றும் சிறு கட்சிகள், சிவில் அமைப்புக்களுக்கிடையிலான புாிந்துணா்வு ஒப்பந்தம் மாா்ச் மாதம் 2ம் திகதி கைச்சாத்திடப்படும் என சஜித் பிறேமதாஸ கூறியுள்ளாா்.

நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இந்த அறிவிப்பினை சமகி ஜன பலவேகயவின் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்தார்.

மேலும் இந்த ஒப்பந்தம் மார்ச் 2 ஆம் திகதி கொழும்பில் உள்ள நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

அந்தவகையில் குறித்த நிகழ்வில் பங்கேற்க, புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இன்று

அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்தோடு பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தானும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும்

இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இனவாதம், தீவிரவாதம் மற்றும் மத விரோத உணர்வுகளை கட்சி பொறுத்துக் கொள்ளாது என்றும்

சமகி ஜன பலவேகயவின் நோக்கம் இனம், மதம் ஆகியவற்றை கடந்து ஒற்றுமையாக பயணிப்பதே என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்