கடற்படை, விமானப்படை பொலிஸாா் போக்குவரத்து கடமையில்!
கொழும்பில் வாகன நொிசல் அதிகமான இடங்களில் இராணுவ பொலிஸாா் களமிறக்கப்பட்ட நிலையில், தற் போது கடற்படை மற்றும் விமானப்படை பொலிஸாா் களமிறக்கப்பட்டுள்ளனா்.
இதற்கமைய, நேற்று பிற்பகல் முதல் இராணுவ காவல்துறையினருக்கு மேலதிகமாக கடற்படை மற்றும் விமானப்படை காவல்துறையினரும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவ தலைமையகத்திற்கு முன்பாகவும், அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகளிலும், அவர்கள் கடமையில் ஈடுபடுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.