மாவட்ட செயலர் அனலதீவுக்கு விஜயம்
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் (9) புதன்கிழமை அனலைதீவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அனலைதீவு பகுதியில் புரொவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி பொருட்களையும் வழங்கி வைத்தார்.
இவ்விஜயத்தின் போது யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி. ச. மஞ்சுளாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.