மல்யுத்தத்தில் கிண்ணங்களை வழித்துத் துடைத்தது முல்லைத்தீவு மாவட்ட அணி
வடமாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையிலான மல்யுத்த போட்டிகள் கடந்த சனிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.
இதில் பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட அணி 9 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை கைப்பற்றி முதலாமிடத்தையும், வவுனியா மாவட்ட அணி ஒரு தங்கப், ஒரு வெண்கலம் உட்பட இரு பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட அணி 6 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்கள் உட்பட 14 பதக்கங்களை கைப்பற்றி முதலாமிடத்தையும், யாழ்ப்பாண மாவட்ட அணி 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்கள் உட்பட 12 பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தையும், வவுனியா மாவட்ட அணி ஒரு தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் உட்பட 8 பதக்கங்களைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.