மர்மமான பொருளால் 15 பேரில் இருவர் உயிரிழப்பு
வடமராட்சி கடற் பரப்பில் மர்மமான பொருளை அருந்திய 15 பேரில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் நேற்று ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அதேசமயம் விசுவமடு பகுதியிலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இறந்த நபரின் தந்தையும் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவானோர் திரண்டுள்ளனர்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது வடமராட்சி கிழக்கு நாகர் கோயில் பகுதியில் கடலில் இரசாயணப் பதார்த்த போத்தல் மிதந்து வந்துள்ளது. இதனை 15 பருகி பார்த்துள்ளனர். இவர்களில் இருவரே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.