Fri. May 17th, 2024

மரணச்சடங்கு வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது

யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் மரணச் சடங்கு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது மரணச்சடங்கில் இரு தரப்புக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது குறித்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது வாள்வெட்டுச்சம்பவமாக மாறிவிட்டது. இந்த வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்