Sun. May 19th, 2024

மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறை தொடர்பில் முப்படையினரும் சம்மதம் தெரிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் இடைத்தங்கள் முகாம் அல்லது கொரோனா தனிமைப்படுத்தும் நிலையங்களை அமைப்பதில்லை எனவும் நடைமுறைப்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதாக முப்படையினரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையை மேற்கொள்ளுவது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,.
மன்னார் மாவட்ட இராணுவ பொறுப்பதிகாரி,பொலிஸ் அத்தியட்சகர், கடற்படை அதிகாரி ஆகியோரை ஒன்றினைத்து நேற்று (29) புதன் கிழமை மாலை அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது பாஸ் நடைமுறை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்த பிரச்சினைகள் தொடர்பாக தெரியப்படுத்தி இருந்தோம்.
இதன் போது குறித்த நடைமுறைக்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், வெளி மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வருகின்றவர்களை இங்கு தரித்து நிற்பதற்கு  அனுமதிப்பது இல்லை என்றும் பாஸ் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை தாம் ஏற்றுக் கொள்ளுவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
அதே போல் இங்கு சில பாடசாலைகளில்’கொரோனா’ இடைத்தங்கள் முகாம் இருக்கின்றது.கடற்படை வீரர்களை அங்கு வைத்துள்ளார்கள்.
இவ்விடையம் தொடர்பில் நாங்கள் வழியுறுத்தி கூறி உள்ளோம். மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இடைத்தங்கள் முகாம் அல்லது கொரோனா தனிமைப்படுத்தும் நிலையங்களையோ அமைக்க வேண்டாம் என்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைப்பதில் எமக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்திருந்தோம்.
இவ்விடையம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளரையும் நாங்கள் கோரி உள்ளோம் பாடசாலைகளில் அனுமதிகளை வழங்கும் போது எங்களுக்கும் தெரியப்படுத்துமாறு கோரியுள்ளோம்.
மாவட்டத்தில் எங்கு என்ன நடந்தாலும் பொது மக்கள் என்னிடமே கேள்விகளை கேட்கின்றார்கள். இவ்வாறான நிலையங்களை அமைக்க ஏன் அனுமதி வழங்கினீர்கள் என கேட்கின்றனர்.
சில நேரங்களில் எங்களுக்கு தெரியாமல் நடப்பதினால் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெற்று சில நிலையங்கள் இயங்குகின்றது.
இனி வரும் காலங்களில் எமக்கு அதனை அறியத்தருமாறு கோரியுள்ளோம்.அதனடிப்படையில் முப்படையினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஏதாவது நிலையங்களை அமைப்பதாக இருந்தால் மக்கள் செரிவு குறைந்த பகுதிகளிலேயே அதனை நடை முறை பதுத்துவதாக தெரிவித்தனர்.
முற்றாக நிலையங்களை அமைக்க முடியாது என நாங்கள் கூற முடியாது.என தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையை வாய்க்கால் அமைப்புகளுக்கு கொடுக்காமல் விவசாயிகளுக்கு கொடுக்க தீர்மானம்.
இதே வேளை இன்று வியாழக்கிழமை (30) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் கட்டுக்கரை குளத்திற்கான சிறு போக செய்கைக்கான கூட்டம் இடம் பெற்றது.
கமக்கார அமைப்புக்களும் வாய்க்கால் அமைப்புக்களும் தெரியப்படுத்தி இருந்த நிலையில்   குறித்த கூட்டத்தில் 10 வாய்க்கால் அமைப்புக்களின் பிரதி நிதிகள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது  விவசாய திணைக்கள அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள்,மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
600 ஏக்கர் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனைய 400 ஏக்கர் உப தானிய செய்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த 600 ஏக்கரையும் வாய்க்கால் அமைப்புகளுக்கு வழங்காமல் நேரடியாக குறைந்த நிலங்களை கொண்டு விவசாயம் செய்கின்ற மக்களுக்கு அவற்றை 1200 துண்டுகளாக பிரித்து வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஏழு நாட்களுக்குள் அதற்கான பட்டியல் எங்களுக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் நாங்கள் அந்த 1200 பேரையும் சரியாக அடையாளம் கண்டு அவர்கள் நேரடியாக பயிர் செய்கையை செய்வது என்றும், எக்காரணம் கொண்டும் பிரிக்கப்பட்ட துண்டுகள் யாருக்கும் விற்பனை செய்யவோ அல்லது வேறு எந்த முறையிலும் பயண்படுத்த வழங்கவோ முடியாது.
உரியவர்கள் நேரடியாக விதைத்து பலன் பெற வேண்டும்.இதற்கு மேலதிகமாக 20 ஏக்கர் நிலம் விதை உற்பத்தி திணைக்களத்திற்கு பயிர்ச் செய்கை செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான நீர் வினியோகத்தை நீர்ப்பாசன பணிப்பாளரை வழங்க கோரியுள்ளேன். மேலும் உரம் மாணிய அடிப்படையில் இரு தரப்பினருக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1200 நபர்களுடைய பெயர் பட்டியல் கிடைக்கப் பெறுகின்ற பட்சத்தில் இறுதியாக  10 ஆம் திகதி நீர் திறப்பு மற்றும் நீர் வினியோக திகதிகளும் தீர்மானிக்கப்பட்டு குளம் பயிர்ச் செய்கைக்காக திறந்து விடப்படும்.
வாய்க்கால் அமைப்புகளுக்கு நேரடியாக கொடுக்காமல் 1200 விவசாயிகளுக்கு கொடுக்க தீர்மானித்ததன் நோக்கம் அரசாங்கத்தின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் எல்லா மக்களும் பயண் பெற வேண்டும் என்றும் குறிப்பாக ஏழை விவசாயிகள் 1200 பேர் வரை இந்த விவசாய செய்கையை மேற்கொள்ள முடியும் என்றும், எங்களுடைய மக்களுக்கு இச் சிறுபோக செய்கையின் மூலம் உற்பத்தி பொருட்களை சேமித்து வைக்க முடியும் என்று எதிர் வரும் காலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் பட்டினிச்சாவு ஏற்படலாம் என்கின்ற எதிர்ப்புடன் எல்லோறுக்கும் நெல் கிடைக்க வேண்டும் என்கின்ற எதிர் பார்ப்புடன் 1200 பேரூக்கும் நெற் செய்கையை மேற்கொள்ள இம் முறை ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்