Fri. May 17th, 2024

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற உழவர் விழா.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழாவும், உழவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது காலை 7 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.
மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு அகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவகளில் இருந்தும்  தெரிவு செய்யப்பட்ட 12 உழவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது பிரதேசச் செயலாளர்கள்,மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கௌரவிப்பை தொடர்ந்து உழவர் விழா நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்