Fri. May 17th, 2024

மது போதையில் மயங்கி விழுந்தவரின் சங்கிலி அறுப்பு, இருவர் கைது

16.01.வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் மூன்று இளைஞர்கள் மதுபோதையில் ஒன்றாக இருந்தவேளையில்  ஒருவர் மதுபோதை மிஞ்சி மயங்கி கீழே விழுந்துள்ளார்.  அவர் அணிந்திருந்த சங்கிலியை இரண்டு பேரும் கழட்டி சென்று விட்டார்கள். எழுந்து பார்க்கும்போது கழுத்திலிருந்த சங்கிலியை காணவில்லை தன்னுடன் வந்தவர்களையும் காணவில்லை.  இந்த நிலையில் அவர் இன்று வெள்ளிக்கிழமை  போலீஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.  போலீசார் இருவரையும்  கைது செய்துள்ளார்கள். தற்போது விசாரணை நடைபெறுகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்