பயணிகள் பேருந்தில் இருந்த வெடிபொருட்கள்!! -அதிர்ந்து போன இராணுவம்-
மன்னார் – கொழும்பு பயணிகள் பேருந்தில் இருந்து வெடிபொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் கொழும்பு நோக்கிச் புறப்பட்ட குறித்த பேருந்தை நேரியகுளம் பகுதியில் உள்ள இராணுவச் சோதணை சாவடியில் வைத்து சோதணையிடப்பட்டது.
இதன் போது பேருந்திற்குள் இருந்த ஒரு போதியில் 51 டைனமெற் வெடிபொருட்கள் இருப்பது இனங்காணப்பட்டது.
இருப்பினும் பேருந்தில் இருந்த பயணிகள் எவரும் அந்த போதியை உரிமை கோராத நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துணர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் செட்டிக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.