Sat. May 18th, 2024

மன்னாரில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில்  இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில்   முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு மன்னாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

-தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் தற்போதைய சூழ் நிலையை கருத்தில் கொண்டு கலந்து கொண்டவர்கள் சமூக இடை வெளியை பின் பற்றி குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்