தென்மராட்சி மீசாலை வடக்கு பகுதியில் கோவில் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருட்டு
தென்மராட்சி மீசாலை வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு (18/5) கோவில் ஒன்று உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் பல களவாடப்பட்டுள்ளன.
மீசாலை வடக்கு பகுதியில் அமைந்துள்ள பூதவராயர் கோவிலே இவ்வாறு உடைக்கப்பட்டு மூலஸ்தான ஐம்பொன் கலசம், மற்றும் பாத்திரங்கள், குத்துவிளக்குகள், விலையுயர்ந்த , புடைவைகள், பணம் என்பன திருடர்களால் களவாடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைதாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.