Fri. May 17th, 2024

மதுவை அருந்தி உயிரிழந்தவருக்கு தொற்று

மதுசாரம் அதிகளவில் அருந்தியதில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுசாரம் அதிகளவில் குடித்துக் காட்டுவதாக சவால் பிடித்து அதிகளவான மதுசாரத்தைப் பருகியதில் உயிரிழந்துள்ளார் எனவும்,  அதிகளவான மதுசாரத்தைப் அருந்த வைத்து கொலை செய்யப்பட்டதாகவும் இரு வேறுபட்ட கருத்துகள் இடம் பெற்று வருகின்றது.
இச்சம்பவம் தென்மராட்சி கெற்பெலி பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கான பிரேத பரிசோதனையில் அதிகளவான மதுசாரத்தை அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பல இடங்களில் திடீரென மதுசார விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து மதுப் பிரியர்கள் பலரும் சமூக இடைவெளிகளைப் பேணாது, சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது மதுசாரத்தை கொள்வனவு செய்யப்பட்டமைக்கு பல தரப்பினரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி கெற்பெலி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் அதிகளவான மதுசாரத்தை அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அவருக்கான கொரோனா பரிசோதனையில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  பொலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்