Mon. May 20th, 2024

மதுபோதையில் வாளால் வெட்ட முயன்ற இளைஞன் கைது

மதுபோதையில் தாயாரைத் தாக்கியதோடு பொலீஸாரையும் வாளால் வெட்ட முயன்ற இளைஞர் ஒருவரை பொலீஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் இன்று காலை கோண்டாவில் செபஸ்டியன் வீதியில் நடைபெற்றுள்ளது.
இப்பகுதியில் உள்ள இளைஞன் ஒருவர் மதுபோதை உச்சத்தில் தனது தாயாரையும், அயல் வீட்டுக்கார்களையும் தாக்கியுள்ளார். இதனையடுத்து அவசர பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அப்பகுதிக்கு வந்த பொலீஸார் அவரை கைது செய்ய முற்பட்ட போது பொலீஸாரை வாளால் வெட்ட முயன்றுள்ளார். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலீஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து குறித்த இளைஞரை கோப்பாய் பொலீஸார் கைது செய்துள்ளனர்.  அவர் அதிகளவான மதுபோதையில் உள்ளதால் அவர் சுயநினைவின்றி உள்ளார். இதனால் விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்