Tue. May 14th, 2024

மடு பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கியுடன் தந்தை மகன் கைது. 

மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய குஞ்சுகுளம் கிராமத்தில்    சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட  நாட்டு  துப்பாக்கியுடன் தந்தை மகன் ஆகிய இருவரும் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (27) இரவு 10 மணியளவில் மடு பொலிஸார் குஞ்சுக்குளம் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த சட்ட விரோத உள்ளுரில் தயாரிக்கப்பட்ட நாட்டு  துப்பாக்கியுடன் 25 வயதுடைய  மகனும் 50 வயதுடைய  தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும்  மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் மடு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  உதவி பொலிஸ் அத்தியட்சகர்  நிறோசன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்